சைவபரிபாலன சபையினால் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் மீளவும் ஆரம்பிக்கப்பட
அறநெறி வகுப்புக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 3.00 மணி
தொடக்கம் 5.00 மணி வரை நடைபெறுகிறது. பரதநாட்டிய வகுப்புக்கள் ஞாயிற்றுக்கிழமை
தோறும் காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை நடைபெறுகிறது. ஆர்வமுள்ள சகல
மாணவர்களையும் பங்கு கொண்டு பயன் பெறுமாறு வேண்டுகின்றோம.; இவ் வகுப்புக்கள்
யாவும் இலவசமாகவே மேன்மை கொள் சைவ நோக்கத்தில் நடைபெறுகிறது. மேற்படி
செயற்பாட்டிற்கு அயலில் உள்ள பாடசாலைகளும் சைவச் சமுகமும் பூரண ஒத்துழைப்புக்களை
வழங்குமாறு சைவபரிபாலன சபை வேண்டி நிற்கின்றது.